டெல்லி: நிதியமைச்சர் இன்று வெளியிட்ட மத்திய பட்ஜெட் அறிக்கையில் சிகரெட்களின் மீதான கலால் வரியை 15 சதவீத அதிகரித்துள்ளது. இதனால் இத்துறை நிறுவனங்களின் வருவாய் அதிகளவில் குறையும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வரி உயர்விற்கான எதிரொலி மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்திலேயே தெரிந்துவிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சிக்ரெட் உற்பத்தி நிறுவனமான ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் 9 சதவீத அளவில் சரிந்தது.
வரி உயர்வு
மத்திய அரசு இன்று வெளியிட்ட பட்ஜெட் அறிக்கையில் 65mm நீளத்திற்கு குறைவாக இருக்கும் அனைத்து சிகரெட்களுக்கும் 25 சதவீத காலல் வரியும், மீதமுள்ள அனைத்து சிகரெட்களுக்கும் 15 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பொரும்பாலான சிகரெட்கள் அனைத்தும் 65mm நிளத்திற்கு அதிகமாக தான் இருக்கும்.
கலால் வரி
மேலும் இன்றைய பட்ஜெட்டில் புகையிலைக்கான கலால் வரியை கிலோவிற்கு 60 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வு
மத்திய அரசின் கலால் வரி உயர்வினால் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் வருவாய் இலக்கை எட்டவும் நிதி நிலையை மேம்படுத்தவும் சிகரெட்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது.
ஐடிசி
இன்றைய வர்த்தகத்தில் 52 வார உயர்வான 408.75 ரூபாயை எட்டிய ஐடிசி நிறுவனம் அடுத்த சில நிமிடங்களில் கலால் வரி உயர்வை அறிவிப்பு இந்நிறுவனத்தின் பங்குகளை 9 சதவீத சரிவிற்கு தள்ளியுள்ளது.
பிற நிறுவனங்கள்
சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்களில் ஐடிசி நிறுவனம் தான் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது. எஞ்சிய நிறுவனங்களிலான விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் 3 சதவீத சரிவு, காட்பரை பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் 1 சதவீத நிறுவனமும் சரிவை தழுவியது.