டெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து முடித்த அடுத்த நிமிடத்தில் மும்பை பங்குச் சந்தையில் சுமார் 80 புள்ளிகள் வரை சரிந்தது.
2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சாமானிய மக்களின் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படவில்லை என்றாலும், பிபிஎஃப் திட்ட முதலீட்டில் 50,000 ரூபாய்க்கு வரிவிலக்கை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இதேபோல் EPF திட்டத்தில் 50,000 ரூபாய்க்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு போக்குவரத்து மானியமாக மாதத்திற்கு 1,600 ரூபாய் வரை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் தனிநபர் 4.44 இலட்ச ரூபாய் வரை வரி சேமிக்கலாம் என அருண் ஜேட்லி தெரிவித்தார்.