லண்டன்: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ஹிந்துஜா குழுமம் இந்திய பாதுகாப்பு துறையில் இறங்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் பல துறைகளில் வர்த்தகம் செய்து வரும் இக்குழுமம், இந்திய பாதுகாப்பு துறையை மேம்படுத்தும் திட்டத்துடன் இத்துறை சார்ந்த உற்பத்தியில் ஈடுப்பட்ட முடிவு செய்துள்ளது.
10இல் இருந்து 11..
இந்நிறுவனம் ஏற்கனவே சுகாதாரம், எனர்ஜி, மின்சார உற்பத்தி, அட்டோமோட்டிவ், வங்கியில், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐடி, மீடியா மற்றும் கேபில், ரியல் எஸ்டேட், வர்த்தகம் போன்ற 10 துறைகளில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது 11வது துறையாக பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தியில் இறங்க உள்ளது.
கோபி ஹிந்துஜா
லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த சாதனங்களை உற்பத்தி செய்ய திறன் படைத்துள்ளதாக இந்நிறுவனத்தின் துணைத் தலைவரான கோபி ஹிந்துஜா தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் படி பாதுகாப்பு துறை உற்பத்திக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பம் மற்றும் வசதிகளும் இக்குழுமம் பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்று நிறுவனங்கள்
இந்தியாவில் உற்பத்தி நிலைகளை துவங்க மூன்று நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், கூடிய விரையில் இத்திட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கவும் உற்பத்தி பொருட்களை தேர்தெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம் என கோபி கூறினார்.
நாங்க இது மட்டும் தான் செய்வோம்...
பாதுகாப்பு துறையில் இறங்குவதால் நாங்கள் விமானத்தையோ, நீர்முழ்கி கப்பலையோ முழுமையாக தயாரிக்க போவதில்லை. இந்தியாவில் உற்பத்தி செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்களுக்கு எங்கள் நிறுவனத்தில் இருக்கும் உற்பத்தி திறன், வடிவமைப்பு, சந்தை அறிவு மற்றும் திறமையான பணியாளர்களை மட்டுமே அளிக்க உள்ளோம் என்றார்.