மும்பை: உலகிலேயே மிக உயரமான துபாய் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் அருகில் இந்தியாவின் முன்னணி ஹோட்டல் நிறுவனமான தாஜ் குரூப் புதிய ஹோட்டல் ஒன்றை அமைக்கிறது.
புதிய ஹோட்டல்
டாடா குரூப் நிறுவன கிளைகளில் ஒன்றான தாஜ் குரூப் துபாயில் துவங்கப்போகும் புதிய ஹோட்டலில் 296 அறைகள், இன்கிளிப் ரூம்கள், 16 ஜூனியர் சூட் மற்றும் 15 ஆரம்பர அறைகள் இருக்கும் என தாஜ் குரூப் தெரிவித்துள்ளது.
பெருவியன் ஸ்டைல்
இப்புதிய ஹோட்டலில் பெருவியன் ஸ்டைல் அமைக்கப்பட்ட அறைகளில் வாடிக்கையாளர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவுகள் அளிக்கப்படும் என்றும், காலை உணவு சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட அறைகளில் வழங்கப்படும் எனவும் இந்நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்திய கலாச்சாரம்
இதுக்குறித்து தாஜ் குரூப் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்திய பாணியில் எங்கள் நிறுவன சேவையை துபாய் போன்ற முக்கிய நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் மிகுந்த மகழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
கிளப் ஹவுஸ் மற்றும் ஸ்பா
இந்த ஹோட்டலில் கிளப் ஹவுஸ், ஸ்பா மற்றும் வெல்னஸ் சென்டர் போன்றவற்றை அமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.
தாஜ் குரூப்
இந்தியாவில் 1901ஆம் ஆண்டு துவங்கப்பட்டது தாஜ் குழுமம். இந்தியாவில் 64 இடங்களில் 112 ஹோட்டல்களும், மாலத்தீவு, மலேஷியா, பிரிட்டன், அமெரிக்கா, பூடான், இலங்கை, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 16 ஹோட்டல்களும் தாஜ் குழுமத்துக்கு சொந்தமாக உள்ளது.