பெங்களுரூ: எஸ்ஏபி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான அனிர்பன் டே மற்றும் கவுஸ்தவ் மித்ரா ஆகியோர் இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அனிர்பன் டே இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான எட்ஜ்வெர்வ் நிறுவன தயாரிப்புகளின் தலைவராகவும், கவுஸ்தவ் மித்ரா புதிய தயாரிப்புகளின் துணை தலைவராகவும் இன்போசிஸ் நிர்வாகம் நியமித்துள்ளது.
விஷால் சிக்கா
இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ-வாக விஷால் சிக்கா பதவியேற்றிய பின்னர் தான் பணியாற்றிய எஸ்ஏபி நிறுவனத்தில் இருந்து பல முக்கிய பணியாளர்களை இன்போசில் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
2014ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து 12க்கும் அதிகாமான உயர்மட்ட அதிகாரிகள் வெளியேறிய காரணத்தால் இந்நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் முடங்கியது. சிக்காவின் நியமனத்திற்கு பின் இந்நிறுவன செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது.
அனிர்பன் டே
இன்போசிஸ் எட்ஜ்வெர்வ் நிறுவன தயாரிப்புகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட பின், இப்பதவியில் இருந்த சஞ்சய் ஃப்ரோஹித் இன்போசிஸ் கன்சல்டிங் வர்த்தகத்தின் தலைவராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்ஏபி நிறுவனத்தில் அனிர்பன் டே
அனிர்பன் டே எஸ்ஏபி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும்போது இந்நிறுவன நிர்வாக தலைவர்களுக்கு மொட்டை கடிதம் போல் மொட்டையான ஈமெயில் அனுப்பியதால், நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கான்கர்
அதன் பின் அனிர்பன் டே கான்கர் என்னும் பயணம் மற்றும் செலவீண மேலாண்மை நிறுவனத்தின் துணை தலைவராக சேர்ந்தார். இந்நிறுவனத்தை எஸ்ஏபி நிறுவனம் 8.3 பில்லியன் டாலருக்கு கைபற்றியதால் மீண்டும் எஸ்ஏபி நிறுவனத்தில் டே இணைந்தார்.
கவுஸ்தவ் மித்ரா
எஸ்ஏபி நிறுவனத்தின் ஸ்டார்ட்அப் ஃபோகஸ் பிரிவின் துணை தலைவராக பணியாற்றி வந்த கவுஸ்தவ் மித்ரா அமெரிக்கவை மையமாக வைத்துக்கொண்டு செயல்படும் இன்னோவேஷன் எகோசிஸ்டம்ஸ் பிரிவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.