மும்பை: மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, இன்போசிஸ் நிறுவனத்தின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ளபங்குகளில் முதலீடு செய்து உள்ளது.
எல்.ஐ.சி நிறுவனம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனம் போற்றப்படும் இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 4 காலாண்டுகளாகத் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இதனிடையில் 2014ஆம் நிதியாண்டின் 4வதுகாலாண்டில் இன்போசிஸ் நிறுவன பங்குகளில் ரூ.300 கோடி முதலீடு செய்துள்ளது.
எல்.ஜ.சி - இன்போசிஸ்
கடந்த ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில் எல்.ஐ.சி நிறுவனம் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவனபங்குகளில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் எல்.ஐ.சி நிறுவனத்தில் இந்நிறுவனத்தின் பங்கு இருப்பு 4.81 சதவீதமாகஉயர்ந்துள்ளது.
பங்கு இருப்பு உயர்வு
மும்பை பங்குச்சந்தையில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த அக்டோபர் - டிசம்பர் மாத காலகட்டத்தில் 4.69சதவீதமாக இருந்த இன்போசிஸ் நிறுவன பங்கு இருப்புத் தற்போது 4.81 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று எல்.ஐ.சிநிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை
இன்றைய மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவன பங்குகள் 2.65 சதவீதம் சரிந்து 2,122.00 ரூபாய்க்குவர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்போசிஸ் பங்குகள்
கடந்த நவம்பர் மாத கடைசியில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு மிகவும் குறுகிய காலகட்டத்தில் சுமார்4,369 ரூபாயில் இருந்து ரூ.1919.35 வரை குறைந்தது குறிப்பிடத்தக்கத்து.
எல்.ஐ.சி ஹவுசிங்
2014ஆம் நிதியாண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 16 சதவீதம் உயர்ந்து 10,799 கோடி ரூபாய் வரைஉயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 1,386.19 வரை உயர்ந்துள்ளது என எல்ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்தெரிவித்துள்ளது. இதனால் தனது பங்குதாரர்களுக்கு 5 ரூபாய் ஈவுத்தொகை அளிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.