டெல்லி: தனி நபர் கணக்கு எண் எனப்படும் பான் கார்டை, பொதுமக்கள் விண்ணப்பம் செய்த 48 மணிநேரத்திற்குள் பெறும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது இயங்கிவரும் ஆன்லைன் சேவையில் 105 ரூபாய் மட்டும் செலுத்தி பான் கார்டு விண்ணப்பித்தால், 2 முதல் 3 வாரத்திற்குள் கிடைத்துவிடும்.
இச்சேவையை எளிமையாக்கும் வகையில் மத்திய அரசு விண்ணப்பம் செய்த 48 மணிநேரத்தில் பான் கார்டு அளிக்கவழிவகைச் செய்துவருகிறது.
மத்திய நேரடி வரி ஆணையம்
இதுகுறித்து மத்திய நேரடி வரி ஆணையத்தின் உயர் அதிகாரி கூறுகையில், "தற்போது உள்ள ஆன்லைன் வசதியை மேம்படுத்தி 48 நேரத்திற்குள் ஒருவர் பான் கார்டு பெறும் வசதியை மத்திய அரசு செய்து வருகிறது." என்று கூறினார்.
ஆவணங்கள்
இப்புதிய சேவையின் மூலம் பான் கார்டு பெற ஒருவர், பிறப்பு தேதியை உறுதி செய்ய, வாக்காளர் அட்டை மற்றும் ஆதார்அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்துள்ளது.
பான் கார்டு பயன்பாடு
பான் கார்டு வரி செலுத்துவதற்கும் மட்டும் அல்லாமல் அதிக விலை மதிப்புடைய அசையா சொத்துக்களை விற்கவும், புதிய வாகனங்களை வாங்க அல்லது விற்கப் போன்ற பல இடங்களில் தேவைப்படுகிறது.
புதிய சட்டம்
நிதிச்சட்டம் 2015இன் படி 1 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிற்கு நகை வாங்கினால் பான் கார்டு அவசியம் என்றுதெரிவித்துள்ளது.