டெல்லி: ஒய்வுதிய அமைப்பான ஊழியர் சேமலாப நிதிய அமைப்பிற்கு (EPFO) 5 சதவீத தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியச் அமைப்புப் சுமார் 5,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்ளது.
இப்புதிய முதலீடுகளுக்கான திட்டத்தைத் தொழிலாளர் அமைச்சகம் வடிவமைக்க உள்ளதாக EPFO அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் இவ்வமைப்பின் வைப்புத் தொகை 80,000 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 1 லட்சம் கோடியாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்விற்கு முக்கியக் காரணம் பணியாளர்களின் சம்பளத்தில் சமுகப் பாதுகாப்பு நிதி 6,500 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்துத் தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சங்கர் அகர்வால் கூறுகையில், "நிதியமைச்சகம் 5 முதல் 15 வரையிலான தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அறிவுத்தியுள்ளது. முதல் முறையாகச் சந்தையில் இறங்குவதால் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படத் திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.