மும்பை: வைப்பு நிதி மோசடி விசாரணையில் நாட்டின் 3 முக்கிய வங்கிகளுக்கு 4.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. மேலும் 8 பொதுத்துறை வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரிய நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான வைப்பு நிதி பத்திரங்களை ஆய்வு செய்யாமல் பண பரிபரிவர்த்தனை செய்யப்பட்டதை கண்டித்து தேனா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளுக்கு 4.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி
இந்த செயல், வங்கிகளில் பத்திரங்களின் மீது ஆய்வு செய்யப்பட முறையான திட்ட முறைகள் என்பத உணர்த்துகிறது.
ஒவ்வொரு வங்கி நிர்வாகமும் வாடிக்கையாளர் மற்றும் வங்கி பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மோசடி
இந்த வைப்பு நிதி மோசடியில் வங்கிகள் பல 100 கோடி ரூபாய் தொகை இழந்துள்ளது.
இதில் மும்பை மெட்ரோபோலிடன் ரீஜினல் டெவலப்மென்ட் அத்தாரிட்டி, தெற்கு இந்திய கல்வி அமைப்பு மற்றும் ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் ஆகிய நிறுவனகளின் பெயரில் போலியான பத்திரங்களின் மூலம் பண பரிமாற்றங்கள் செய்யப்பட்டது.
எச்சரிக்கை
3 வங்கிளுக்கு அபராதம் மட்டும் அல்லமல், ரசிர்வ் வங்கி 8 பொதுத்துறை வங்கிகளுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளது. இதில் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி, விஜயா பாங்க் ஆகியவையும் அடக்கம்.
புகார்
தனியார் நிறுவனத்திடம் இருந்து வந்த புகார்களை வைத்து ரிசர்வ் வங்கி நடத்திய விசாரணையில் பல 100 கோடி ரூபாய் மோசடி திட்டங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.