டெல்லி: சர்வதேச சந்தையில் தங்கம் விலைச் சரிவினாலும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்ததாலும், இந்திய சந்தையில் தங்கத்தின் இறக்குமதி 19.5 சதவீதம் அளவு அதிகரித்ததுள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 34.32 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 28.7 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்க இறக்குமதி
2014-15ஆம் ஆண்டுக் காலத்தில் அதிகப்படியான தங்க இறக்குமதி செய்ததன் மூலம், நாட்டின் நடப்பு கணக்குப் பாற்றாக்குறை சுமார் 137 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மார்ச் மாதம்
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் தங்க இறக்குமதி இரட்டிப்பானது. இதன் மூலம்தங்க இறக்குமதியின் மதிப்பு 4.98 பில்லியன் டாலராகவும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 11.79 பில்லியன் டாலராகவும்உயர்ந்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா
உலகில் தங்க நகைகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதால், ஒவ்வொரு வருடமும்மக்கள் தொகை அதிகரிப்பது போல் தங்கத்தின் இறக்குமதி அளவு அதிகரித்து வருகிறது.
ரிசர்வ் வங்கி
கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் குறைந்ததால், நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை மேம்பட்டுக்காணப்பட்டது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான கட்டணத்தில் சில தளர்வுகளைஅறிவித்தது.
இந்த வாய்ப்புப் பயன்படுத்தித் தங்க வர்த்தகர்கள் அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்தனர்.
80:20 திட்டம்
தங்க இறக்குமதியை அதிகளவில் குறைத்தது, ரிசர்வ் வங்கி அறிவித்த 80:20 திட்டம் தான்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் நடப்பு கணக்குப் பற்றாக்குறை மேம்பட்டுக் காணப்பட்ட நிலையில் ரிசர்வ் வங்கி இத்திட்டத்தை விலக்கிக் கொண்டது. இதன் காரணமாகவே நாட்டில் தங்க இறக்குமதி அதிகரித்தது.