தொலைத்தொடர்புத் துறை 'வளைந்து கொடுத்ததால்' ரூ.3,367 கோடி லாபம் பெற்ற ரிலையன்ஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தொலைத்தொடர்புத் துறை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்திற்கு 2001ஆம் ஆண்டு விலை நிலையில் மொபைல் சேவை அனுமதி வழங்கியதால் இந்நிறுவனம் 3,367.29 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது எனக் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) குற்றம்சாட்டியுள்ளது.

2010ஆம் வருடம் நடந்த 4ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், இந்தியாவில் 4ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றையை இன்போடெல் பிராட்பேண்ட் நிறுவனம் கைபற்றி இருந்தது.

இதே 2010ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை ரிலையன்ஸ் மொத்தமாகக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

குறைவான விலை

குறைவான விலை

வெறும் இண்டர்நெட் சேவை அளிக்க வேண்டிய அலைக்கற்றையில் மொபைல் சேவை (வாய்ஸ் கால் சேவை) அளிக்கத் தொலைத்தொடர்புத் துறை இந்நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதுவும் சந்தை மதிப்பிற்கும் மிகவும் குறைவான விலையில்.

உரிமம்

உரிமம்

வாய்ஸ் கால் சேவை அளிக்க, Unified Licence பெற நுழைவு கட்டணமாக 15 கோடி ரூபாயும், நிறுவனத்தை முழு மொபைல் சேவை நிறுவனமாக மாற்றும் கட்டணமாக ( migration fee) 1,658 கோடி ரூபாயை ஆகஸ்ட் 19, 2013வது வருடம் ரிலையன்ஸ் இன்போகாம் தொலைத்தொடர்புத் துறைக்குச் செலுத்தியுள்ளது.

ரூ.3,367.29 கோடி லாபம்

ரூ.3,367.29 கோடி லாபம்

தொலைத்தொடர்பு அனுமதித்த விலை நிலை 2001ஆம் ஆண்டில் மத்திய அரசால் நிறுவப்பட்டது.

இக்குறைவான கட்டணத்தில் அனுமதி பெற்றதால் ரிலையன்ஸ் நிறுவனம் 3,367.29 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளதாக CAG அமைப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

நிராகரிப்பு

நிராகரிப்பு

இந்த ஆய்வறிக்கையைப் பல தரப்பு ஒப்புதலுக்குப் பின்பு தொலைத்தொடர்புத் துறையின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் சுப்ரீம் கோர்ட்டில் நிராகரித்து விட்டார்.

பொது நல வழக்கு

பொது நல வழக்கு

மேலும் இவ்வறிக்கையை ஒரு என்ஜிஓ-வின் பொது நல வழக்குத் தொடுத்ததன் மூலம் தற்போது கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆய்வுக்குப் பின் சமர்ப்பித்துள்ளது.

வாய்ஸ் சேவை

வாய்ஸ் சேவை

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்திற்குத் தொலைத்தொடர்புத் துறை அக்டோபர் 21, 2013 வது வருடம் வாய்ஸ் சேவை அளிப்பதற்கான Unified Licence வழங்கியது குறிப்பிடத்தக்கத்து.

ஐஎஸ்பி உரிமம்

ஐஎஸ்பி உரிமம்

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், 2010ஆம் ஆண்டில் இன்போடெல் நிறுவனத்தைக் கைப்பற்றும் போது ஐஎஸ்பி அதாவது internet service provider ஆகச் செயல்பட லைசென்ஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

இந்த ஐஎஸ்பி உரிமம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு Unified Licence பெறவும் அடுத்தடுத்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கு பெறவும் வாய்ப்பாக அமைந்ததாகக் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்குக் கிடைத்தது...

மத்திய அரசுக்குக் கிடைத்தது...

இந்த அனுமதியால் மத்திய அரசுக்கு 22,842 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சில ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DoT move led to Rs 3,367-crore gain for Reliance Jio Infocomm, says CAG

Reliance Jio Infocomm received "undue benefit" of Rs 3,367.29 crore because of the telecom department's decision to allow the Mukesh Ambani-owned telco to offer voice services over the broadband spectrum it won in the 2010 4G auctions, the national auditor has said.
Story first published: Saturday, May 9, 2015, 16:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X