டெல்லி: இந்தியா கடந்த 5 மாதங்களாக ஏற்றுமதி அளவு தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும்நாட்டின் ஏற்றுமதி அளவு 14 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் அதன் அளவு 21 சதவீதம் குறைவாக இருந்தது. கடந்த 6 வருடத்தில் இது மிகப்பெரிய சரிவாகும்.
சர்வதேச சந்தையின் மந்தமான நிலையின் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகள் தேவை அளவு குறைந்தது. இதனால் நாட்டின் ஏற்றுமதி அளவு அதிகளவில் குறைந்துள்ளதாக இத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் மொத்த ஜிடிபி அளவில் 16 சதவீதம் நாட்டின் ஏற்றுமதி பெறுகிறது. கடந்த வருடம் நாட்டின் மொத்த ஏற்றுமதிஅளவு மத்திய அரசு நிர்ணயம் செய்ய 340 பில்லயன் டாலரில் இருந்து சரிந்து 310.5 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
மேலும் வருகிற மே 29ஆம் தேதி ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான ஜிடிபி அறிக்கையை மத்திய அரசு வெளியிடஉள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதி அளவு 42.65 சதவீதம் குறைந்து 7.44 பில்லியன் டாலராகக்குறைந்துள்ளது. மார்ச் மாத்தில் இதன் அளவு 33.05 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.