டெல்லி: சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னிலை வகித்து வரும் டாப் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்நிலையில் 2015ஆம் ஆண்டின் முதல் 3 மாதத்தில் மட்டும் இந்தியாவில் மொபைல் விற்பனை 14.5 சதவீதம் குறைந்துள்ளதாகச் சைபர்மீடியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் இந்திய மொபைல் சந்தையைத் தடுமாற்றம் அடையச் செய்துள்ளது. இதன் மூலம் மொபைல் விற்பனை நிறுனங்கள் இந்தியாவில் விற்பனையை அதிகரிக்கப் புதிய யுத்திகளைக் கையாள திட்டமிட்டு வருகின்றன.
விற்பனை சரிவு
2015ஆம் ஆண்டின் ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில், இந்தியாவில் மட்டும் 53 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 2014ஆம் ஆண்டில் கடைசிக் காலாண்டில் இதன் எண்ணிக்கை 62 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் படி இந்திய சந்தையில்மொபைல் விற்பனை 14.5 சதவீதம் சரிந்துள்ளதாகச் சைபர்மீடியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
(மறவாமல் கடைசி ஸ்லைடரை பார்க்கவும்..)
ஸ்மார்ட்போன்
மொபைல் போன் ஒருபுறம் இருந்தாலும், ஸ்மார்ட்போன் விற்பனையும் இக்காலகட்டத்தில் 7.14 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் மலிவான ஸ்மார்ட்போன் விற்பனையும் 18.3 சதவீதம் அளவில் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய சந்தை
ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் வர்த்தகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஆசிய சந்தையிலேயே முதன்மையாக உள்ளது.
2016ஆம் ஆண்டில் இந்தியாவில் 204 மில்லியன் மொபைல்கள் விற்பனையைச் செய்து அமெரிக்காவை பின்னுக்குத் தள்ள வேண்டிய நிலையில், 2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இதன் விற்பனை சரிந்துள்ளது.
என்ன காரணம்
கடந்த சில மாதங்களில் புதிதாக வெளிவந்த மொபைல் போன் யாவும் வாடிக்கையாளர் விரும்பும் வண்ணம் இல்லை, வரி விதிப்பு, நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி ஆகியவை இந்திய சந்தையின் விற்பனையைப் பாதித்துள்ளது.
கலால் வரி
இந்தியாவில் மொபைல் தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு மொபைல்போன்கள் மீதான கலால் வரியை 6 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் மொபைல் போன்களின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
சாம்சங் முன்னிலை
இந்திய மொபைல் விற்பனை சந்தையில் சாம்சங் 18.5 சதவீதமும், மைக்ரோமேக்ஸ் 12.1 சதவீதமும், மைக்ரோசாப்ட் நிறுவனம் 9.6சதவீதமும் பெற்றுள்ளது. மீதமுள்ள நிறுவனங்கள் அனைத்தும் இணைத்தபடி 59.8 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது.
நிறுவனங்களும் முதலீடும்...
மொபைல் சந்தையை மட்டுமே நம்பி இந்தியாவில் பல நிறுவனங்கள்து வங்கப்பட்டு உள்ளது, மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் மொபைல் சந்தையை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களில் முதலீடுசெய்துள்ளனர்.
மைந்திரா நிறுவனம்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அறிந்து தனது டெஸ்க்டாப் தளத்தை மூடிவிட்டு முற்றிலும் மொபைல் தளமாக மாறியுள்ளது.
தங்கம் விலை