ரயில்வே சரக்கு போக்குவரத்தின் வருவாய் 17 சதவீதம் உயர்ந்தது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2015ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத்தில் இந்திய ரயில்வே துறை, சரக்கு போக்குவரத்தின் மூலம் 9,461.47 கோடி ரூபாய்வருவாய் பெற்றுள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் 17.23 சதவீதம் அதிகமாகும். இதே காலகட்டத்தில் கடந்த வருடம்8,017.18 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஏப்ரல் மாதம் 46.07 மில்லியன் டன் நிலக்கரி, 8.99 மில்லியன் டன் இரும்பு தாது, ஸ்டீல், மற்றும் பிற பொருட்கள் மற்றும் 9.38மில்லியன் டன் சிமெண்ட் ஆகிய பொருட்களை டெலிவரி செய்ததன் மூலம் ரயில்வே துறை அதிகளவிலான வருவாயைப்பெற்றது.

 
ரயில்வே சரக்கு போக்குவரத்தின் வருவாய் 17 சதவீதம் உயர்ந்தது!

இதுமட்டும் அல்லாமல் உணவுப் பொருட்கள், பொட்ரோலியம், ஆயில், விவசாய உரங்கள் ஆகியவற்றையும் டெலிவரிசெய்துள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இத்துறையின் மேம்படுத்தவும், அதிகளவிலான வருவாய் பெற டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாதலைமையில் தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளார் இத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

மேலும் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்த பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்துள்ளதுஇந்திய ரயில்வே துறை.

அடுத்த 15 வருடத்தில் இந்திய ரயில்வே துறை மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து இருக்கும் என்பது உறுதி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railway's April freight earnings up by over 17 per cent from last year

Railways earned Rs 9,461.47 crore from freight transportation in April of this year as compared to Rs 8,071.18 crore during the same period in 2014, an increase of 17.23 per cent.
Story first published: Wednesday, May 20, 2015, 14:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X