மும்பை: கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்குறியீடு 27,000 புள்ளிகளை நிலைநாட்ட கடுமையாகப் போராடி வந்த நிலையில், தற்போது 28,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ் உள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் உயர்வுடன் துவங்கினாலும், பல ஏற்ற இறக்கங்களுடன் சரிவுடன் சந்தை முடியவடைந்தது.
இதன் படி இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 27 புள்ளிகள் சரிவுடன் 27,809 புள்ளிகளை எட்டியுள்ளது.
நிஃப்டியும் இன்று நிலையான வர்த்தகத்தைப் பெறாமல் தடுமாறியது. இதனால் நிஃப்டி குறியீடு 2.25 புள்ளிகள் சரிந்து 8,421.00 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், மாருதி, மஹிந்திரா, ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, ரிலையன்ஸ், டாடா பவர், ஏர்டெல்,ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, சிப்லா, டாடா ஸ்டீல் போன்ற முக்கிய நிறுவனங்களும் சரிவை தழுவியது.
சர்வதேச சந்தையில் ஜாப்பான் மற்றும் சீன சந்தையில் இன்றுஉயர்வுடன் காணப்படுகிறது. பிரட்டன், ஜெர்மனி, பீரான்ஸ் ஆகிய சந்தைகள் சரிவில் தத்தளித்து வருகிறது.