மும்பை: நாணய சந்தையில் ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், இந்திய சந்தையில் இன்று சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாகப் பார்மா, கேப்பிடல் கூட்ஸ், ஆட்டோமொபைல், எண்ணெய் துறை நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்து, 27,820 புள்ளிகள் வரை உயர்ந்தது.
கடந்த திங்கட்கிழமை சென்செக்ஸ் 27,643 புள்ளிகளை அடைந்தது குறிப்பிடத்தக்கத்து.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் ஏறுமுகத்திலேயே இருந்தது, இதன் காரணமாக நிஃப்டி 96.50 புள்ளிகள் வரை உயர்ந்து 8,415.50 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இன்று காலை வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் மற்றும் என்டிபிசி சமார் 2 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உயர்ந்தது. அதேபோல் கோல் இந்தியா நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இந்நிறுவனப் பங்குகளும் 1.80 சதவீதம் வரை உயர்ந்து 390 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.