மும்பை: இந்தியாவில் பிஸ்கட் விற்பனையில் முன்னணியில் இருந்த பார்லே நிறுவனத்தைப் பல ஆண்டுப் போராட்டத்திற்குப் பிறகு பிரிட்டானியா ஓரம்கட்டி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
25,000 கோடி ரூபாய் வர்த்தகமான பிஸ்கட் விற்பனை சந்தையில் கடந்த சில மாதங்களாக நுசில் வாடியா தலைமை வகிக்கும் பிரிட்டானிய நிறுவனம் செய்த மாற்றங்களின் மூலம் விற்பனை அளவு உயர்ந்து பார்லே நிறுவனத்தை முந்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சந்தை மதிப்பின் படி ஏப்ரல் மாத்தில் பிரிட்டானிய 28 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது, இதேகாலகட்டத்தில் பிர்லே நிறுவனம் 27.5 சதவீதத்தைப் பெற்று இருந்தது.
வருடாந்திர அடிப்படையில் பார்க்கும் போது பார்லே நிறுவனம் தான் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. பார்லே நிறுவனத்தின் பார்லே ஜி பிஸ்கட் விற்பனையை இன்றளவும் எந்த ஒரு நிறுவனத்தாலும் தகர்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பார்லே நிறுவனத்தை விஜய் சவுகான் மற்றும் சரத் சவுகான் ஆகியோர் தலைமை வகித்து வழிநடத்துகின்றனர்.