டெல்லி: இந்தியாவில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் கடன் கடலில் முழ்கி தவிப்பதை தவிர்க்கவும், வட்டியில்லாக் கடன் அளிக்க மத்திய அரசு 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விவசாயக் கடன் திட்டத்தின் மூலம் விவசாயிகள் வட்டியில்லாக் கடன் பெற முடியும் என நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சக தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறினார்.
நில கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவினாலும், இப்புதிய திட்டம் கண்டிப்பாக விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ள நில கையகப்படுத்தும் சட்டத்தின் படி, மக்களிடம் உள்ள காலி நிலத்தை 4 மடங்கு அதிக மதிப்பிற்குப் பெற்று அதைத் தொழிற்சாலை அமைப்பதற்குப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.