லண்டன்: இன்றைய உலகப் பொருளாதாரத்தின் நிலைப்பாடு 1930ஆம் ஆண்டில் நிலவிய பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலையில் உள்ளதால், அனைத்து நாடுகளின் சென்டரல் வங்கிகளும் தங்களது நிதியியல் கொள்கைகளை இன்றைய பொருளாதாரத்திற்கு ஏற்ப வடிவமைக்கக் கேட்டுக்கொண்டார், இல்லையெனில் மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் எனவும் எச்சரித்துள்ளார்.
தற்போதைய நிலையில் சென்டரல் வங்கிகள் தங்களது நாணய கொள்கையில் தொடர்ந்து தளர்வுகளை அறிவித்து வருகிறது. இது சர்வதேச பொருளாதாரத்தை மிதமான வேகத்தில் பாதித்து வருகிறது. மேலும் இதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்.
ஆனால் இந்தியாவில் இதன் நிலை முற்றிலும் மாறுபட்டது. மத்திய அரசு அறிவித்துள்ளத வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்ப முதலீட்டை அதிகரிக்கும் அவசியம் உள்ளதால் இந்திய பொருளாதாரக் கொள்கைகளில் சில தளவுர்கள் தேவைப்படுகிறது எனத் தெரிவித்தார்.
மேலும் சட்டம் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் இன்றைய காலப் பொருளாதார நிலைப்பாட்டிற்கு ஏற்ப ஆலோசனை செய்து புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என லண்டன் பிஸினஸ் ஸ்கூல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரகுராம் ராஜன் தெரிவித்தார்.