பெங்களூரு: புதன்கிழமை (ஜூலை 1) டிஜிட்டல் இந்தியா திட்டம் இன்று துவங்கியதை அடுத்து சந்தையின் முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் வாய்ப்புகளைக் கைபெற்ற ஆயத்தம் ஆகி வருகிறனர்.
இதன் ஒரு பகுதியாக டிசிஎஸ் நிறுவனத்தின் 1 லட்ச ஊழியர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 3 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
என். சந்திரசேகரன்
இந்தியாவில் புதிய பாதை ஒன்று உருவாகியுள்ளது, மேலும் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் மிகப்பெரிய பங்கு வகிக்க உள்ளது. இத்துறையில் உள்ள வர்த்தகத்தை அடைய நிறுவனம் 1 பணியாளர்களுக்கு இத்துறை தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என டிசிஎஸ் நிறுவன தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்தார்.
வருடாந்திர பொதுக்கூட்டம்
இந்நிறுவனத்தின் 20வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகரன், "டிசிஎஸ் நிர்வாகம் டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து இத்துறையில் சிறப்பான வளர்ச்சியைக் காண திட்டமிட்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.
5 பில்லியன் டார்கெட்
டிசிஎஸ் நிறுவனம் இத்துறையில் 5 பில்லியன் டாலர் வரை வருவாய் பெற தேவையான அனைத்துப் பயிற்சி மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்
மேலும் புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும், மேம்பட்ட சேவையை அளிக்கவும் புதிய தொழில்நுட்பத்தில் மென்பொருளை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
இன்போசிஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக டிசிஎஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இதற்காகப் புதிய ஒரு நிறுவனத்தையும் கையகப்படுத்தியுள்ளது.