சென்னை: கிரீஸ் பொருளாதார வீழ்ச்சி இந்திய சந்தையை அதிகளவில் பாதிக்காது. இந்நாட்டில் இந்திய சந்தையின் முதலீடு மற்றும் வர்த்தகம் மிகவும் குறைவு என்பதால் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
இத்தகையை நிலையை அடிப்பிடை பொருளாதார யுத்திகளைக் கொண்டே எளிதாகக் களைய முடியும் ரகுராம் ராஜன் சென்னையில் நடத்த கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆய்வுகள்
இப்பொருளாதாரப் பிரச்சனைகளைக் களைய ரிசர்வ் வங்கி கிரீஸ் நாட்டில் இந்திய சந்தையின் முதலீடு மற்றும் நிதியியல் சேவைகள் குறித்து முக்கிய ஆய்வுகள் செய்யப்பட்டு வருவதாக ஆர்பிஐ கவர்னர் சென்னையில் நடந்த முக்கியக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறினார்.
யூரோ சந்தை
கிரீஸ் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக யூரோ சந்தை பதிக்கப்படும், அதுமட்டும் அல்லாமல் ஆசிய சந்தையிலும் கணிசமான வீழ்ச்சி எதிர்பார்க்கலாம். இதன் மூலம் இந்திய சந்தையும் குறிப்பிடத்தக்க அளவில் மட்டுமே பாதிப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
முதலீட்டை நோக்கிய இந்தியா
தற்போது இந்தியாவில் பருவ மழை மற்றும் புதிய வளர்ச்சி திட்டங்களுக்காக அன்னிய முதலீட்டைக் கவர இந்திய சந்தை தயாராகி வருகிறது.
ஏற்றமதி
இந்திய வர்த்தகத் துறையில் ஏற்றுமதியின் அளவு நாள்தோறும் குறைந்து வருவகிறது, இதனைச் சரிசெய்யவும் ஊக்கப்படுத்தவும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய வருகிறது.
மேலும் இந்நிலை இந்தியாவில் மட்டும் அல்ல ஒட்டுமொத்த ஆசிய சந்தையும் இத்தகைய நிலையைச் சந்திக்கிறது.
முதலீட்டு அளவு
ஜூன் 2015ஆம் ஆண்டு முடிவடைந்த காலாண்டில் இந்திய சந்தையில் குவிந்துள்ள முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பு மட்டும் 1.15 டிரில்லியன் டாலர். இது கடந்த வருடத்தை விடவும் 33 சதவீதம் அதிகம் எனச் சிஎம்ஐஈ (Center For Monitoring Indian Economy) அமைப்பு தெரிவித்துள்ளது.
பணவீக்கம்
நடப்பு சந்தை நிலவரத்தின் படி நாட்டின் பணவீக்கத்தின் அளவு நிலையாக உள்ளது. மேலும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாத்தில் நாட்டின் பணவீக்க அளவின் கணிப்புகளை 5.8% இருந்து 6% ஆக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.