மும்பை: இனி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு தங்களது கடன் நிலுவையை செலுத்த மூன்று நாள் கூடுதல் நேரம் கிடைத்துள்ளது.
வியாழக்கிழமை ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, இன்று முதல் வங்கிகள், கிரெடிட் கார்டு தவணை தொகைக்கான கெடு தேதிக்கு (Due date) மூன்று நாள் பின்னரே அபராதம் விதிக்க வேண்டும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இதனால் கிரெடிட் கார்டு உரிமையாளருக்கு தவணை தொகை செலுத்த மூன்று நாள் கூடுதலாக கிடைத்துள்ளது.
விடுமுறை
இப்புதிய அறிவிப்பின் மூலம் வங்கிகள் விடுமுறை மற்றும் பிற காரணங்களுக்காக விடப்படும் விடுமுறைகள் ஈடு செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ-யின் செக்
ஒவ்வொரு லேட் பேமென்ட் ஆதாவது, கெடு தேதிக்கு பின் மூன்று நாட்களில் செலுத்தப்படும் தவணையை குறித்த அறிவிப்புகளை சிபில் போன்ற நிறுவனங்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் ஆர்பிஐ வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கிரெடிட் ஸ்கோர்
ஆர்பிஐ-யின் இத்தகைய அறிவிப்பின் மூலம், தவணைத் தொகை செலுத்த தவறினால் வாடிக்கையாளரின் கிரேட் ஸ்கோர் கண்டிப்பாக குறையஅதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
அபராதம்
தவணையை உரிய நேரத்தில் செலுத்த தவறினால் வங்கிகள் 100 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை அபராதம் விதிக்கும். இதுமட்டும் அல்லாமல் கிரெடிட் ஸ்கோர் குறையும்.
முடிவுரை
எனவே இந்த மூன்று நாட்களை கணக்கில் கொள்ளாமல் கிரெடிட் கார்டு உரிமையாளர்கள் தங்களது தவணையை உரிய நேரத்தில் செலுத்தவது உத்தமம்.