பெங்களூரு: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) ராஜிவ் மங்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அடோப் நிறுவனத்தில் பல முக்கியப் பதவிகளில் சுமார் 10 வருடங்களுக்கு அதிகமாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடோப் நிறுவனத்துக்கு முன்பாகத் தொழில் முனைவோராக இருந்தார். இரு நிறுவனங்களைத் தொடங்கி 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்தார்.
இப்பணியிடத்தில் இருந்த அமிதாப் மிஷ்ரா கடவ்த பிப்ரவரி மாதம் வெளியேறியதால் தற்போது ராஜிவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் நியமனத்தின் மூலம் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு புதிய பரிமாணத்தைப் பெறும் என இந்த ஆன்லைன் விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது தொழில்நுட்ப பிரிவில் 1,000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த வருட இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காத உயர்ந்த ஸ்னாப்டீல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னரே இந்நிறுவனம் தனது விரிவாக்கப் பணிகளுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து 500 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியது.