டெல்லி: நடப்பு நிதியாண்டின் டிசம்பர் மாத்திற்குள் இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தவோம் என வோடபோன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிராக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும் இந்நேரத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் போட்டி அளிக்கும் வகையில் வோடபோன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
வோடபோன் நிறுவனம்
இந்நிலையில் வோடபோன் நிறுவனம் இந்தியாவின் முக்கியச் சந்தைகளான மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தனது புதிய சேவையை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
ஏர்டெல்
இந்தியாவில் பல ஆயிரம் கோடி முதலீட்டில் ஏர்டெல் நிறுவனம் பல கட்டச் சோதனைகளுக்குப் பின் சுமார் 250 நகரங்களில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தி நாட்டில் 4ஜி சேவை அளித்த முதல் நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் 4ஜி..
மேலும் இச்சேவையை ஏர்டெல் நிறுவனத்தைப் போலவே இந்தியா முழுவதுமாக விரிவாக்கம் செய்ய வோடபோன் திட்டமிட்டு இருந்தாலும், அதற்கான காலக்கெடு எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்க்து.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் நிறுவனங்கள் மத்தியில் 4ஜி அலைக்கற்றைக்கு மிகப்பெரிய போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ வரும் டிசம்பர் முதல் செயல்படத்தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுவரை 3ஜி சேவையை இந்தியா முழுமையாக அளிக்காத ரிலையன்ஸ் சில பகுதிகளுக்கு நேரடியாக 4ஜி சேவையை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் 4ஜி சேவை
சர்வதேச அளவில் 18 நாடுகளில், 2 கோடி வாடிக்கையாளர்களுடன் வோடபோன் 4ஜி சேவையை அளித்து வருகிறது.