பெங்களூரு: உலகின் முன்னணி கால்பந்து நிறுவனங்களான மான்செஸ்டர் யுனெய்டெட் மற்றும் செல்சியா எப்சி நிறுவனங்களை டிஜிட்டல்மயக்கும் பணியில் இந்திய ஐடி நிறுவனங்கள் இணைந்துள்ளது.
எச்சிஎல் மற்றும் விப்ரோ
கடந்த வாரம் மான்செஸ்டர் யுனெய்டெட் நிறுவனத்துடன் எச்சிஎல் இணைந்த அறிவிப்புகள் வெளியான அடுத்த சில நாட்களிலேயே செல்சியா எப்சி நிறுவனத்தின் 3வருட டிஜிட்டல்மயக்கும் ஒப்பந்தத்தில் விப்ரோ இணைந்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் டிஜிட்டல் உலகில் தனது வர்த்தகம் மற்றும் ஆதித்தகத்தை அதிகரிக்க புதிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
செல்சியா எப்சி
விப்ரோ நிறுவனத்துடன் இணைந்ததன் மூலம் செல்சியா எப்சியின் விளையாட்டு திடலுக்கு வரும் மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை அளிக்கும் என செல்சியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விப்ரோ நிறுவனம்
இத்திட்டத்திற்கு விப்ரோ நிறுவனம் சமீபத்தில் கையகப்படுத்திய டிசைன்இட் நிறுவனத்தை உட்படுத்தப் பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் விப்ரோ நிறுவனத்தின் டிசைன்இட் குழு ஸ்டாம்போர்டு பிரிட்ஜ் பகுதியில் இருந்து செயல்பட உள்ளது.