மும்பை: உலக நாட்டுகள் மத்தியில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் நிலையில் 2025ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா இந்தியா மத்தியிலான வர்த்தகம் 500 பில்லியன் டாலரை எட்டும் என ஒரு ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.
PWC மற்றும் இந்தியா அமெரிக்கச் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில் இரு நாட்டுகளின் அரசு மற்றும் முதலீட்டாளர்கள், கார்பரேட் நிறுவனங்கள் , வர்த்தகர்கள் மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் வர்த்தகம் எளிதாக எட்ட முடியும் என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.
2006ஆம் ஆண்டுக் கணக்கின் படி இரு நாட்களுக்கு மத்தியிலான வர்த்தகம் 2014ஆம் ஆம் ஆண்டில் 4 மடங்கு உயர்ந்து 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதனால் தற்போதுள்ள பொருளாதாரச் சூழல் மற்றும் வாய்ப்புகளுக்கு 500 பில்லியன் டாலர் இலக்கை எளிதாக எட்ட முடியும் என PWC கன்சல்டிங் பிரிவின் தலைவர் சஷாங்க் திரிபதி தெரிவித்தார்.
இந்த இலக்கை அடைய ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு, இன்பராஸ்டக்சர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ், எனர்ஜி, உற்பத்தி மற்றும் சேவை பிரிவுகளைக் கொண்டு எளிதாக எட்ட முடியும் என இந்நிறுவன கூட்டணி தெரிவித்துள்ளது.