டெல்லி: இந்தியாவில் 6 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது அன்னிய முதலீடு அளவுகளை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த ஆர்வமாக உள்ளது எனக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (IRDA) தலைவர் டி எஸ் விஜயன் தெரிவித்துள்ளார்.
காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீட்டு வரம்பை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தக் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்காக அனுமதி பெற நிறுவனங்கள் பல கட்டங்களில் அனுமதி பெற வேண்டி நிலை உள்ளதால் அன்னிய முதலீட்டு அனுமதியில் சிறிது காலதாமதம் ஏற்படும்.
இத்துறை நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடு அனுமதி கிடைத்தால், பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு கிடைக்கும். இதனால் இத்துறையில் வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டம் எனச் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதுதவிர இந்தியாவில் தற்போதைய நிலையில் நீண்ட கால ஹெல்த் பாலிசிகள் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்கள் தேவைப்படுகிறது. இதற்கான பரிந்துரை மற்றும் திட்ட வடிவத்தை ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் ஒரு முடிவெடுக்கும்.