டெல்லி: இந்திய தொழிற்சாலைகளின் உற்பத்தி அளவுகள் (IIP) கடந்த சில மாதங்களாகக் குறைவாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 3 வருட உயர்வை எட்டி 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் வளர்ச்சிக்கு உற்பத்தித் துறையும், சுரங்க துறையும் மிகவும் உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்
செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் சில புள்ளிகள் உயர்ந்தாலும், கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏற்ற வகையில் நிலையான அளவுகளிலேயே உள்ளது.
ஆசிய சந்தை..
மந்தமான வளர்ச்சியில் உள்ள சர்வதேச பொருளாதாரச் சந்தையில் இந்தியாவில் தொழிற்சாலை உற்பத்தி அளவு ஆசிய சந்தையில் புதிய உந்து சக்தியை உருவாக்கியுள்ளது.
வளர்ச்சி விகிதம்
மத்திய அரசின் சில திட்ட ஒப்புதல்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித தளர்வுகள் மூலம் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் சுமார் 7.5 - 8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய புள்ளியியல் அலுவலகம்
திங்கட்கிழமை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் தொழிற்சாலை உற்பத்தி அளவு 6.4 சதவீதமாக உள்ளது என அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் இதன் அளவு 4.1 சதவீமாகவும் இருப்பதாக அறிவித்துள்ளது.
2012 அக்டோபர் மாதம் இதன் அளவு 8.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி
ஆகஸ்ட் மாதத்தில் சுரங்கத் துறை 3.8 சதவீதமாகவும், உற்பத்தித்துறை 6.89 சதவீதமாகவும், மின்சாரத் துறை 5.6 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இக்காலகட்டத்தில் ஒட்டுமொத்த தொழிற்சாலை உற்பத்தி அளவுகள் 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.