பெங்களூரு: நாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் இந்த வருடம் சுமார் 20,000 பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் இன்போசிஸ் பல வளர்ச்சி திட்டத்தை வகுத்துள்ள நிலையிஸ், இத்திட்டங்களை வெற்றிபெற செய்திட அதிகளவிலான பணியாளர்கள் நிறுவனத்திற்குத் தேவைப்படுகிறது.
20,000 பிரஷ்ஷர்கள்
கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் இன்போசிஸ் நிறுவனத்தில் 20,000 பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்தப்பட உள்ளது, இந்த எண்ணிக்கை பெரும்பாலும் கேம்பஸ் தேர்வு மூலம் செய்யப்படும் என இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான யு.பி. பிரவீன் ராவ் தெரிவித்தார்.
கல்லூரி படிப்பு முடித்த (முன் அனுபவம் இல்லாத) உடன் நிறுவனத்தில் சேர்க்கப்படும் ஊழியர்களைப் பிரஷ்ஷர்கள் என அழைக்கப்படும்.
ஊக்கத் தொகை
மேலும் நிறுவனத்தின் பயிற்சியாளர்களாக (interns) இணையும் ஊழியர்களின் எண்ணிக்கை உயர்த்தவும் இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கான ஊக்கத்தொகை 4,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் இருக்கும் எனவும் அவர் தெவித்தார்
நியமனம்
இவ்வாறு இன்போசிஸ் நிறுவனத்தில் பயிற்சியாளர்களாக இணையும் மாணவர்கள் நிறுவன பணியில் நிரந்தரமாகப் பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் பிரவீன் ராவ் தெரிவித்தார்.
சம்பளம்
கேம்பஸ் தேர்வும் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்பவர்களுக்கு 5-6 மாதங்கள் பயிற்சியும், 3.25 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்க உள்ளதாக இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிக் பில்லியன் டேஸ்
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..