டெல்லி: நாட்டின் 5வது மிகப்பெரிய பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர், இண்டிகோ நிறுவனத்தைப் போலவே பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் சுமார் 150 மில்லியன் டாலர் (978 கோடி ரூபாய்) நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது.,
இதற்காகக் கோஏர் நிறுவனம் சில முக்கிய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தி வருவதாகக் கோஏர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரகமான வாடியா குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாடியா குழுமம்
இந்தப் பெயர்களை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாம் தினசரி இக்குழும நிறுனங்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்தி வருகிறோம்.
இக்குழுத்தின் கீழ் கோ ஏர்லைன்ஸ், பாம்பே டையிங், பிரிட்டானியா, பாம்பே ரியாலிட்டி, வாடியா டெக்னோ என்ஜினியரிங் சர்விசர்ஸ் போன்று பல துறைகளில் சுமார் 10 நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
வங்கிகள்
கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பதா அல்லது பங்குதார்களின் பங்குகளைக் குறைப்பதா என்பது பற்றி வங்கிகள் வாடியா குழுமத்திற்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாகவும் இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோ ஏர்
இந்தியாவில் கே ஏர் நிறுவனத்தில் சுமார் 19 ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் கோஏர் இந்திய விமானப் போக்குவரத்தில் சுமார் 8.4 சதவீத சந்தையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
லாபத்தில் கிங்
மார்ச் மாதம் முடியும் நிதியாண்டில் கோஏர் 14 - 15 மில்லியன் டாலர் லாபத்தைப் பெறும் என் CAPA அமைப்பு கணித்துள்ளது.
இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் இண்டிகோ நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக லாபம் பெறுவது கோஏர் நிறுவனம்தான்.
செபி
வாடியா தலைமையில் இயங்கும் கோஏர் நிறுவனம் பங்குச்சந்தையில் குதிப்பதற்கான தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களைத் தயாரித்தபின் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காகச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க உள்ளது.
இண்டிகோ நிறுவனம்
ஐபிஓ மூலம் இண்டிகோ நிறுவனம் சுமார் 464 மில்லியன் டாலர் வரை பெற உள்ளது.