தங்கம் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்வு.. ஐரோப்பாவும் அமெரிக்காவும் தான் காரணம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) தனது அரசு பத்திர கொள்முதல் திட்டத்தை வெறும் 6 மாதம் வரை மட்டுமே நீட்டித்துள்ளதால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ECB குறைந்தது 2 வருடமாவது நீட்டிக்கும் என எதிர்பார்த்த நிலையில் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதேபோல் அமெரிக்கப் பெடரல் வங்கியும் 10 வருடங்களுக்குப் பின் தனது வட்டி விகிதத்தை அதிகரிக்க உள்ளதால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்த முதலீட்டைக் குறைத்து அவரச கால முதலீடாக நிலையான லாபத்தைப் பெற நாணய சந்தையில் முதலீடு செய்தனர்.

தங்கம் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்வு.. ஐரோப்பாவும் அமெரிக்காவும் தான் காரணம்..!

இதனால் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் இன்று சரிவு முடிவடைந்துள்ளது. நாணய சந்தையில் முதலீட்டு அளவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து 2,380 ரூபாய்க்கும், 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து 2,545 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.

தங்கத்தைப் போல வெள்ளியின் விலை 470 ரூபாய் அதிகரித்து 34,050 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அடுத்தச் சில வாரங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது. எனவே தங்கத்தின் மீது முதலீடு செய்யும் முன் ஆலோசனை செய்து முதலீடு செய்யவும்.

தங்கம் விலை ஏன்.. எப்படி.. குறையும்..? நாளை பார்க்கலாம் வாங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price fell 5 rupees per gram

Gold price fell 5 rupees per gram. Due to ECB and federal reserve decisions.
Story first published: Friday, December 4, 2015, 17:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X