சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சுந்தரம் பிஎன்பி பாரிபாஸ் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 8.50 சதவீத வட்டியில் அளிக்கிறது.
இத்திட்டத்தின் பொதுமக்கள் ஜூன் 30, 2016ஆம் ஆண்டு வரையில் கடன் பெறலாம் சுந்தரம் பிஎன்பி பாரிபாஸ் தெரிவித்துள்ளது. மேலும் இக்கடன் வீடு கட்ட மட்டும் அல்லாமல் இடிந்த கட்டிடத்தைச் சரி செய்தல், பாதிக்கப்பட்ட வீடுகளை இயல்பு நிலைக்குத் திருப்பதல் போன்ற முக்கியப் பயணிகளுக்குக் கடன் உதவி அளிக்கத் தயாராக உள்ளதாக இந்த நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேஷ்னல் ஹவுசிங் பாங்க் மறுநிதி திட்டத்தின் காலத்தை நீட்டி இருப்பதால், சென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் இத்தகைய கடன் திட்டத்தை அறிவித்துள்ளோம் எனச் சுந்தரம் பிஎன்பி பாரிபாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஆச்சாரியா தெரிவித்தார்.
இக்கடனைத் திருப்பிச் செலுத்த 3 முதல் 7 வருடம் வரையிலான கால அவகாசம் அளித்துள்ளது சுந்தரம் பிஎன்பி பாரிபாஸ் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் கடன் பெற்றுக்கொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் வேண்டுகிறது.