மும்பை: கடந்த 2 வாரக் காலமாகத் தொடர்ந்து குறைந்து வரும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 67 ரூபாயாகக் குறைந்து 2 வருடச் சரிவை எட்டியுள்ளது.
இந்திய ரூபாய் போல் சீனா நாணயமான யுவான், அமெரிக்க டாலருக்கு எதிராக 4.5 வருடச் சரிவை இன்று சந்தித்துள்ளது.
அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகளை எதிர்பார்த்து சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் கடந்த 1 மாத காலமாக உலகச் சந்தைகளில் செய்திருந்த டாலர் முதலீட்டைத் தொடர்ந்து குறைத்து வருகின்றனர். இதனால் நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
வரும் 15, 16ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் முக்கியக் கூட்டத்தில் வட்டி உயர்விற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
மேலும் அமெரிக்கச் சந்தையில் நான்-பார்ம் பிரிவின் கீழ் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதால், இம்முறை பெடர்ல ரிசர்வ் கண்டிப்பாகத் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் அவர்களும் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த 75 சதவீத வாய்ப்புகள் உண்டு எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1 வருட காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 6 சதவீத குறைந்துள்ளதாக இந்திய நாணய சந்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலர் மற்றும் பிற நாட்டு நாணயங்களின் மதிப்பீடுகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.