மும்பை: சர்வதேச சந்தையில் டாலரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 13 பைசா வரை குறைந்துள்ளது.
டிசம்பர் மாத இறுதியை எட்டியுள்ள நிலையில் வங்கி பரிமாற்றம் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல் அமெரிக்கச் சந்தை தனது வட்டி உயர்வு பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதாலும், விழாக்காலம் என்பதாலும் சந்தையைப் பாதிக்கும் வகையில் எவ்விதமான வர்த்தகமும் நடைபெறவில்லை, இத்தகைய காரணங்களால் அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் 2 பைசா மட்டுமே சரிந்து 66.19 ரூபாய் என்ற நிலையில் முடிந்த டாலர்- ரூபாய் நாணய பரிமாற்றம், இன்று 13 பைசா வரை சரிந்து 66.32 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த 8 நாள் வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 1.34 சதவீதம் அல்லது 90 பைசா உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 17.67 புள்ளிகள் சரிந்து 26,016.46 புள்ளிகளாக உள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 12.65 புள்ளிகள் சரிந்து 7,911.50 புள்ளிகளாக உள்ளது.