மும்பை: தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது. மும்பை சந்தையில், பத்து கிராம் தூய தங்கத்தின் விலை ரூ. 28,780 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதிக்குப் பிறகு தங்கத்தின் விலை இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
திருமண சீசன் காரணமாகவே விலை இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதேபோல வெள்ளியின் விலையும் கூட உயர்ந்துள்ளது.
மும்பைச் சந்தையில் நிலைத்த தங்கத்தின் விலையானது 10 கிராமுக்கு ரூ. 345 உயர்ந்து ரூ. 26,910 ஆக உயர்ந்துள்ளது.
தூய தங்கத்தின் விலையானது ரூ. 345 உயர்ந்து, பத்து கிராம் தங்கம் ரூ. 28,780 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, பிப்ரவரி 3ம் தேதிக்குப் பிறகு இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
சென்னையில்
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (10 கிராம்) ரூ. 26,320 ஆக இருந்தது. 24 கேரட் தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ. 28,149 ஆக இருந்தது.