இந்திய பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம்...: சென்செக்ஸ் 807, நிப்டி 239 புள்ளிகள் சரிவு

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இன்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 807.07 புள்ளிகள் குறைந்து 22,951.83 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 239.35 புள்ளிகள் சரிந்து 6,976.65 புள்ளிகளாக உள்ளது. பங்குச்சந்தைகளில் கடந்த 4 நாட்களாக கரடியின் ஆதிக்கம் நிலவுவதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

 

கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பு இருந்த நிலைமைக்கு பங்குச் சந்தைகள் சரிந்தன. குறிப்பாக பொதுத்துறை வங்கிப்பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. வாராக் கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகைகள் அதிகரித்ததால் பொதுத்துறை வங்கிகள் மூன்றாம் காலாண்டில் நஷ்டமடைந்தன. அதனால் அந்த பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.

 
இந்திய பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம்...: சென்செக்ஸ் 807, நிப்டி 239 புள்ளிகள் சரிவு

ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் சரிவடைந்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. ம்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 807.07 புள்ளிகள் குறைந்து 22,951.83 புள்ளிகளாக முடிந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 239.35 புள்ளிகள் சரிந்து 6,976.65 புள்ளிகளாக நிறைவடைந்தது. கடந்த நான்கு நாட்களாகவே பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் கவலையடந்துள்ளனர்.

ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஜெர்மன் டேக்ஸ் 2.42 சதவீதமும், பிரான்ஸ் கேக் 40 2.93 சதவீதமும், பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100 2.22 சதவீதமும் சரிவை சந்தித்தது. அமெரிக்க மத்திய வங்கி படிப்படியாக வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற தகவல் வெளியானதன் எதிரொலியாக சர்வதேச பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி காணப்படுகிறது.

சென்செக்ஸ் 23 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 7000 புள்ளிகளுக்கு கீழும் வர்த்தகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் பங்குச்சந்தையும், நியூயார்க், ஹாங்காங் சந்தைகளும் இன்று சரிவை சந்தித்த காரணத்தால் இந்திய பங்குச்சந்தைகளும் இன்றும் கடும் சரிவை சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex crashes 807 points

The Sensex cracked below 23,000, plummetting 807.07 points to close at 22,951.83, while Nifty broke 7,000 mark and then tanked 239.35 to 6,976.35.
Story first published: Thursday, February 11, 2016, 16:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X