மும்பை: சர்வதேச நாணய சந்தையில், திங்கட்கிழமை ஆரம்பக் கால வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 23 பைசா உயர்ந்து 68.69 ரூபாய் அளவிலான சரிவை சந்தித்துள்ளது.
உலக வர்த்தகச் சந்தையில் டாலர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால் இந்தியா ரூபாய் மதிப்பு உட்படச் சர்வதேச நாணயங்களின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து நாணய பரிமாற்ற சந்தை வல்லுநர்கள் கூறுகையில், இறக்குமதியாளரிகளின் அதிகமான டாலர் தேவை மற்றும் பிற நாணயங்களுக்கு மத்தியிலான டாலர் மதிப்பு உயர்வு, உள்நாட்டுச் சந்தையில் டாலர் மீதான அதிகளவிலான வர்த்தகம் ஆகியவை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.69 ரூபாயாகச் சரிந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நாணய பரிமாற்ற சந்தை சிவாஜி ஜெயந்தி காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.46 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் முடிந்தது.
இந்நிலையில் இன்றைய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 78.30 புள்ளிகள் உயர்ந்து 23,787.45 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 25.30 புள்ளிகள் உயர்ந்து 7,233.25 புள்ளிகளை அடைந்தது.