மும்பை: ஐரோப்பிய சந்தையின் வலிமையான நிலை, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் உள்நாட்டுச் சந்தையில், மாருதி சுசூகி நிறுவனத்தைப் போன்ற சிறப்பான காலாண்டு முடிவுகள் ஆகியவை சென்செக்ஸ் குறியீட்டை 328 புள்ளிகள் வரை உயர்த்தியது.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு சரிவில் துவங்கினாலும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மூலம் லாப நிலைக்கு உயர்ந்தது.
இந்நிலையில் மதிய நேர வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தையின் தாக்கத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 340 புள்ளிகளை வரை உயர்ந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 328.37 புள்ளிகள் உயர்ந்து 26,007.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 107.60 புள்ளிகள் உயர்ந்து 7,962.65 புள்ளிகளை எட்டியது.