மும்பை: இந்திய சந்தையில் இண்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் பிற கார்பரேட் நிறுவனங்களின் மோசமான காலாண்டு முடிவுகள் மற்றும் உற்பத்தி அளவின் சரிவுகள் ஆகியவை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டை 167 புள்ளிகள் வரையிலான சரிவை பதிவு செய்துள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, வர்த்தகம் துவங்கும் முதலே மிகப்பெரிய அளவிலான சரிவில் துவங்கியது மும்பை பங்குச்சந்தை.
நாட்டின் உற்பத்தி நிலைகள் குறித்து நிக்கி/மார்கிட் பிஎம்ஐ அறிக்கை வெளியிட்ட அறிக்கை சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்ச் மாதத்தில் 52.4 புள்ளிகளாக இருந்த உற்பத்தி அளவு நான்கு மாத சரிவை எட்டி 50.5 புள்ளிகள் என்ற மிகக் குறைவான அளவை ஏப்ரல் மாதத்தில் எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 169.65 புள்ளிகள் குறைந்து 25,436.97 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 43.90 புள்ளிகளை இழந்து 7,805.90 அடைந்துள்ளது.
திங்கட்கிழமை சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பெல், கெயில், ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி, லூபின், கோல் இந்தியா, ரிலையன்ஸ், எச்டிஎப்சி, மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் கணிசமான லாபத்தைச் சந்தித்தது.