மும்பை: புதன்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 67.64 ரூபாய் வரை குறைந்து 9 மாத சரிவை சந்தித்தது.
இதன்பின் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் லாபகரமான சூழ்நிலையின் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 470 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதற்கு மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் இந்திய சந்தை குறித்த மதிப்பீடு உயர்வும் முக்கியக் காரணம்.
பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்ந்துள்ளதால் 67.64 ரூபாயில் வர்த்தகம் செய்யப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பு 3 மணியளவில் 67.32 ரூபாய் வரை உயர்ந்து இந்திய நாணயம் வலிமை அடைந்தது.
இதன் மூலம் 10 வருட முதலீட்டுப் பத்திரங்கள் 7.464 சதவீதத்தில் வர்த்தகம் செய்யப்பட்டது.
2016ஆம் நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 1.8 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.