பங்குச்சந்தை உயர்விற்குக் கைக்கொடுத்த 7வது சம்பள கமிஷன்.. 215 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் தாக்கம் பல நாட்களாகச் சந்தையில் நிலவிய நிலையில், இன்று சர்வதேச சந்தை இயல்பான வர்த்தக நிலைக்குத் திருப்பியது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் 7வது சம்பள கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு புதன்கிழமை வர்த்தகத்தில் 250 புள்ளிகள் வரை உயர்ந்தது.

பங்குச்சந்தை உயர்விற்குக் கைக்கொடுத்த 7வது சம்பள கமிஷன்.. 215 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ஆசிய சந்தையின் லாபகரமான வர்த்தக நிலையில், சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் உயர்வில் வர்த்தகம் செய்யப்பட்டது. நிலையான வர்த்தகத்தில் இருந்து சென்செக்ஸ் 7வது சம்பள கமிஷன் ஒப்புதல் செய்திகள் வெளியான அடுத்தச் சில நொடிகளில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 215.84 புள்ளிகள் வரை உயர்ந்து 26,740.39 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடு 76.15 புள்ளிகள் உயர்ந்து 8,204.00 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Ends 216 Points Higher On Seventh Pay Commission Salary Hike

The benchmark BSE Sensex surged over 200 points on Wednesday on a buying build-up by participants, tracking a global rally
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X