மும்பை: ஐரோப்பிய- பிரிட்டன் பிரிவில் 1,000 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ், இன்று ஓரே நாளில் 300 புள்ளிகள் வரை உயர்ந்து மீண்டும் 27,000 புள்ளிகள் என்ற இயல்பான வர்த்தக நிலைக்குத் திரும்பியுள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச சந்தைகளின் சாதகமான வர்த்தக சூழ்நிலை மற்றும் ஜூன் மாதத்திற்கான ஆர்டர்கள் இன்று முடிவடையும் காரணத்தாலும் முதலீட்டாளர்கள் இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதிகளவிலான முதலீட்டைப் பெற்றது.
ஐரோப்பிய- பிரிட்டன் பிரிவில் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் ஜூலை மாத்தில் அதிகளவிலான வளர்ச்சியை அடைய உள்ளது இதனால் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் அதிகளவில் முதலீடு செய்யதனர். இதுவே இன்றைய வர்த்தக உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மேலும் மத்திய அரசு அடுத்த சில மாதங்களில் அமலாக்கம் செய்யப்படுவதாக உள்ள ஜிஎஸ்டி வர்த்தக சந்தையிலும் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 259.33 புள்ளிகள் உயர்ந்து 26,999.72 புள்ளிகளை எட்டியது. அதேபோல் சென்செக்ஸ் குறியீடு 83.75 புள்ளிகள் உயர்ந்து 8,287.75 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.