இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவை வழங்கும் நிறுவனமான இஃபோசிஸ் ஐடி துறையின் மெதுவான வளர்ச்சியின் காரணமாக கேம்பஸ் நேர்காணல் மூலம் வேலைக்கு எடுக்கும் எண்ணிக்கையைக் குறைக்க இருபதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆண்டுக்கு 20,000 பொறியாளர்கள்
பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் சென்ற சில வருடங்களாக ஆண்டுக்கு 20,000 பொறியாளர்களை வேலைக்கு எடுத்து வந்தது.
தற்போது அதில் இருந்து 3,000 அதிகமான எண்ணிக்கையை இந்த வருடம் குறைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
15% வரை குறைக்க வாய்ப்பு
இந்த வருடம் வேளைக்கு ஆட்கள் எடுப்பது 15% விரை இருக்கலாம் என்றும் இனி வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
இது குறித்து இஃபோசில் தலைமை எச்ஆர் ஒருவரிடம் கேட்கும் போது இது போன்ற எந்த முடிவும் இதுவரை நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் தொழில்நுட்ப தடைகள் மற்றும் அதிகரித்து வரும் திறன்கள் காரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்குத் திறன் மேம்படுத்தும் பயிற்சி, புதிய தொழில்நுட்ப பயிற்சி ஆகியவற்றை அதிகரிக்க உள்ளது என்றும் கூறினார்.
அதிகமான திட்ட மேலாளர்கள்
தற்போது தேவைக்கு அதிகமான திட்ட மேலாளர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் வேறு தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ளாததால் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்குப் பயிற்சி அளித்து அனைவருக்குமான வேலையை அளிக்கும் முயற்சியை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
16 லட்சம் மானவர்கள்
இந்தியாவில் ஆண்டுக்கு 16 லட்சம் மானவர்கள் ஐடி துறை சார்ந்த பட்டதாரிகளாக வருகின்றனர் எனவும் அதில் 2 லட்சம் நபர்களுக்கு மட்டுமே சரியான வேலை வாய்ப்பு அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.