மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கி கூட்டத்தின் முடிவுகளுக்காகக் காத்திருந்த முதலீட்டாளர்கள் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்று உறுதி செய்த நிலையில், சரிவுடன் முடியும் என எதிர்பார்த்த மும்பை பங்குச்சந்தை கணிசமான லாபத்தில் இன்று முடிவடைந்தது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 47.81 புள்ளிகள் சரிந்து 28,024.33 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலேவே நிஃப்டி குறியீடும் 25.15 புள்ளிகள் சரிந்து 8,615.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாக்டர் ரெட்டி நிறுவனம் 10.07 சதவீதம் அளவிற்குக் குறைந்தது. இதேபோல் ஐடிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, ஒஎன்ஜிசி, ஹீரோமோட்டோ கார்ப், மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.