சென்னை: எய்சர் குழுமத்தின் எய்சர் மோட்டாஸ் லிமிடெட் நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் 42 சதவீத வருவாய் உயர்வை அடைந்துள்ளது. வரி, வட்டி, தேய்மானம், பிற செலவுகளுக்கு பிந்தை வருவாய் அளவில் 65 சதவீத உயர்வை பெற்று 470 கோடி ரூபாய் பெற்று வர்த்தக சந்தையை கலக்கியுள்ளது.
2016ஆம் நிதியாண்டை சிறப்பான மற்றும் வரலாறு காணாத லாப உயர்வை நாங்கள் எட்டியுள்ளோம் என எய்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் லால் காலாண்டு முடிவு வெளியிட்ட கூட்டத்தில் செய்தியாளர்கள் மற்றும் பங்குதார்களுக்கு தெரிவித்துள்ளார்.
இக்காலக்கட்டத்தில் எய்சர் மோட்டாஸ் லிமிடெட் தலைமையின் கீழ் இருக்கும் ராயல் என்பீல்ட் நிறுவன மோட்டார் சைக்கிள் விற்பனை 38 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் சித்தார்த் கூறினார்.
இந்தியாவில் ராயல் என்பீல்ட் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க விற்பனை மையங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 66 டீலர்களை விற்பனை முனையங்களில் இணைக்க உள்ளோம்.