கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதன் ஒரு நடவடிக்கையாக 3 லட்சம் ரூபாய்க்கு மேலான ரொக்க பணப் பரிவர்த்தனையை செய்யத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது என்று நேரடி வரிக்கான மத்திய வாரியத் தலைவர் ராணி சிங் நாயர் தெரிவித்தார்.
சிறப்பு புலனாய்வுக் குழு
கருப்புப் பணத்தை ஒழிப்பது குறித்து உச்ச நீதி மன்றம் நியமித்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் 3 லட்சம் ரூபாய்க்கு மேலாக ரொக்க பணப்பரிவர்த்தனை மட்டும் இல்லாமல் 15 லட்சம் வரை கையில் இருப்பு வைத்துக்கொள்ளவும் தடை விதக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
1 சதவீதம் வரி
வருமான வரித் துறையின் கீழ் ஏற்கனவே பண பரிவர்த்தனையின் போது 1 சதவீதம் வரி என வசூலிக்கப்படுவதாகவும், பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருப்புப் பணத்திற்கான சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எம் பி ஷா இந்த அறிக்கையை உச்ச நீதி மன்றத்தில் சென்ற மாதம் சமர்ப்பித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள முறை
கணக்கில் வராத மிகப் பெறும் தொகை வெளியில் உள்ளதாகத் தெரிவித்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, இது பற்றி பல வெளிநாடுகளில் உள்ள முறைகளை எடுத்துக்காட்டாக குறியுள்ளதாகவும் கூரப்படுகிறது.
தண்டனைக்குரிய குற்றம்
மூன்று லட்சத்திற்கும் மேலாக பணப்பரிவர்த்தனை செய்யும் செய்யும் போது அந்தப் பரிவர்த்தனையை சட்டவிரோத மற்றும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை
அதிகபட்ச அளவான 15 லட்சம் ரூபாய் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விரைவில் தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.