டெல்லி: பிப்ரவரி மாத கடைசி நாள் நிதிநிலை தாக்கல் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. 2017ஆம் ஆண்டு முதல் ஜனவரி கடைசி நாளில் நிதிநிலை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே இதை நடைமுறைப் படுத்தும் போது அரசுக்கு உள்ள நான்கு சிக்கல்களை சந்திக்கிறது.
நிதி ஆண்டில் மாற்றம்
ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரை கணக்கிடப்பட்டு வரும் தற்போதைய நிதி ஆண்டின் முறையை மாற்ற வேண்டி வரும்.
புதிதாக நிதி ஆண்டை மாற்றும் போது வரவு செலவு திட்டச் செயலாக்க முறையும் மாற்ற வேண்டி வரும்.
அரசியல் செயல்பாடுகள்
நிதிநிலை நாடாளுமன்றத்தில் விரிவான கருத்துக்களைச் செய்யக் கூடிய அரசியல் நடைமுறை.
நிதிநிலை மீதான விவாதம் இரண்டரை மாதங்கள் வரை ஏற்படும்.
பாராளுமன்றத்தின் அட்டவணையை மாற்ற வேண்டி வரும்.
அரசு அரசியல் ரீதியான பார்வைகளையும் முன் வைக்க வேண்டும்.
பல மாற்றங்கள்
இந்த நிதி ஆண்டின் நிதிநிலைகளில் கிடிக்குப்பிடி ஆகும். ஜிஎஸ்டி வரி ஏப்ரல் 1-அம் தேதி துவங்கப்படும் போது இன்னும் பல மாற்றங்கள் செய்ய வேண்டி வரும்.
ரயில்வே நிதிநிலையினை பொது நிதிநிலையுடன் இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
குறைந்த நேரம்
நிதிநிலை சுழற்சி பொதுவாக செப்டம்பர் இறுதியில் இருந்து தொடங்கப்படும்.
ஒரு மாதம் முன்பே நிதிநிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் இப்போதே அதற்கான வேலைகளைத் துவங்க வேண்டும். இல்லை என்றால் ஒரு மாதம் நெருக்கடியில் பணிகளைச் செய்ய வேண்டி வரும்.