டெல்லி: அமேசான் நிறுவனம் ப்ரைம் என்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் அஷ்யூர்டு என்றும் பிரீமியம் உறுப்பினர் சேவைகளைத் தொடர்ந்து ஸ்னாப்டீல் கோல்டு என்ற சேவையை துவக்கி உள்ளது.
ஸ்னாப்டீல் கோல்டு சேவை வாயிலாக ஸ்னாப்டீல் வாடிக்கையாளர்கள் இலவச டெலிவரி, இலவச ஒரு நாள் டெலிவரி மற்றும் நீட்டிக்கப்பட்ட பாதுகாப்பான வாங்குதல் வழிமுறைகளைப் பெறலாம்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், அமெசோன் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் இதற்கான தை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறிவரும் நிலையில் ஸ்னாப்டீல் நிறுவனம் நெட் பேங்கிங், கிரெடிட் / டெபிட் கார்டு, ஈஎம்ஐ அல்லது வால்லெட் சேவைகளைப் பயன்படுத்தி புக் செய்பவர்களுக்கு இலவச சேவையை அறிவித்துள்ளது.
2010 ஆண்டு துவங்கப்பட்ட ஸ்னாப்டீல் நிறுவனம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடனும், 50 மில்லியன் பொருட்களுடனும், 1000 வகைகளுடனும் தனது விற்பனையைச் செய்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் 6000 நகரங்களில் தனது டெலிவரியை செய்துவருகிறது.