'இந்தியா' திறனுக்கு ஏற்ற வளர்ச்சியை அடையவில்லை.. ரகுராம் ராஜன் வருத்தம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்திய கொண்டுள்ள வளத்திற்கும் ஆற்றலுக்கும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்க வேண்டும். ஆனால் நாம் சந்தித்தது மிகவும் குறைவு என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், 2015-16ஆம் மத்திய வங்கியின் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பாட்ஷா-வாக இருக்க வேண்டிய இந்திய பொருளாதாரம் மாணிக்கமாக உள்ளது.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

கடந்த 3 வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றிய ரகுராம் ராஜன் வருகிற செப்டம்பர் 4ஆம் தேதியன்று தனது பணியில் இருந்து விடைபெறுகிறார்.

இந்நிலையில் 2015-16ஆம் ஆண்டின் மத்திய வங்கியின் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

வருடாந்திர அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் ரகுராம் ராஜன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசுகையில், நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற சரக்கு மற்றும் சேவை வரித் திட்டத்தைப் போல் நாட்டில் சில முக்கியத் திட்டங்களை நடைமுறை படுத்துவதன் வாயிலாக இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என ராஜன் கூறினார்.

பருவமழை

பருவமழை

அதேபோல் பருவமழையின் மூலம் நாட்டில் அதிகளவிலான உற்பத்திகள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் ஆகியவை இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊந்து சக்தியாக அமையும் எனவும் கூறினார்.

புதிய கவர்னர்

புதிய கவர்னர்

உர்ஜித் பட்டேல் கவர்னர் அரியணையில் உட்கார இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் கட்டுப்பத்தல், வணிக வங்கிகள் வட்டி விகித்தை குறைத்தல், அதனின் எதிரொலியைக் கணித்தல், இருப்புநிலையைச் சரியான நிலையில் வைத்திருப்பது ஆகியவையே இந்திய மத்திய வங்கியின் முக்கியப் பணி என ரகுராம் ராஜன் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார்.

வட்டி வகிதம்

வட்டி வகிதம்

பணவீக்கம் குறைந்தபின் வட்டி விகிதத்தைக் குறைப்பதே சிறந்தது. நாட்டில் பணவீக்கம் குறைக்கப்படாமல் வட்டியைக் குறைத்தால் அதிகளவிலான பொருளாதார மற்றும் வர்த்தக நெருக்கடி உருவாகும் என்றும் அவர் கூறினார்.

புதிய வழிகள்

புதிய வழிகள்

மேலும் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த வங்கிகள் பரிமாற்ற வளர்ச்சியை நோக்கிய செல்ல வேண்டும். அதனினும் முக்கியமானது வங்கிகள் தங்களது இருப்பு நிலை அறிக்கையை வலிமையான வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

செலவுகள்

செலவுகள்

இந்திய வங்கிகள் அடுத்தத் தலைமுறை சேவைகளில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த வேண்டும் இதன் மூலம் வங்கிகளில் நிர்வாகப் பணிகள் எளிமையாக்கப்படுவதுடன், செலவுகள் அதிகளவில் குறைந்து இருப்புநிலை அறிக்கையும் வலிமையடைய உதவும் என ராஜன் கூறினார்.

வளர்ச்சி அளவு

வளர்ச்சி அளவு

இந்நிலையில் ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 30 புள்ளிகளை உயர்த்தி 7.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

6.5 சதவீத உயர்வு..

6.5 சதவீத உயர்வு..

நடப்பு நிதியாண்டில் பருவமழை கணிசமாக அதிகரித்துள்ளதால் விவசாயத் துறை உற்பத்தி 6.5 சதவீதம் வரை உயரும் எனவும் தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

கவலை

கவலை

நாட்டின் பணவீக்கம் இன்னமும் 4 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதைக் கண்டு தான் மிகவும் வருந்துவதாகவும் குறிப்பிட்டார் ராஜன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI's annual report: Raghuram Rajan says India's growth below potential

RBI governor Raghuram Rajan lists economic growth, curbing inflation, clean-up of bad loans in the banking sector as key ‘work in progress’ areas
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X