சென்னை: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் களையப்பட்டுச் சிறப்பான தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
இந்த முறை பிக் பில்லியன் டே வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பான சேவை வழங்க வேண்டும் எனத் திட்டமிட்ட பிளிப்கார்ட் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியிலாகவும் சரி, ஊழியர்கள் எண்ணிக்கையும் சரி மிகப்பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது.
பிக் பில்லியன் டே தள்ளபடி விற்பனையில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் பொருட்களை மிகவும் குறைந்த காலகட்டத்திற்குக் கொண்டு சேர்க்க பிளிப்கார்ட் நிறுவனம் தனது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெலிவரி பிரிவில் 10,000 புதிய ஊழியர்களை இணைத்துள்ளது.
800 ஊழியர்களின் பணிநீக்கத்தில் இறங்கியுள்ள பிளிப்கார்ட் 10,000 ஊழியர்களைப் புதிதாக இணைத்திருப்பது சந்தையில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிளிப்கார்ட்
கடந்த 'பிக் பில்லியன் டே' தள்ளுபடி விற்பனையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய பிரச்சனைகளைச் சந்தித்தனர். இதனால் வாடிக்கையாளர் மத்தியில் பிளிப்கார்ட் தனது நம்பிக்கையை இழந்தது.
இதன் பின்னர்ப் பிளிப்கார்ட் நிறுவனர்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மன்னிப்புக் கடிதம் மூலம் வர்த்தக மற்றும் மதிப்புச் சரிவில் இருந்து மீண்டு வந்தது இந்நிறுவனம்.
முதலீடு
பிளிப்கார்ட் நிறுவனம் அடுத்த மாதம் நடைபெற உள்ள 'பிக் பில்லியன் டே' தள்ளுபடி விற்பனைக்காகவே சந்தையில் புதிய முதலீடு செய்துள்ளது.
10,000 ஊழியர்கள்
பிக் பில்லியன் டே விற்பனையில் பொதுவாக 60 சதவீதம் அதிகத் தள்ளுபடி விற்பனையைப் பெறும் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த நேரத்தில் டெலிவரி செய்யும் திட்டத்துடன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் இந்தியா மூழுக்கச் சுமார் 10,000 ஊழியர்களைத் தற்காலிகமாக நியமித்துள்ளது.
மேலும் பெரும்பாலான ஊழியர்கள் இருசக்கர வாகனங்கள் மூலம் இந்தியா முழுக்க டெலிவரி செய்ய நியமித்துள்ளதாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்காலிக ஊழியர்கள்..
ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனம் 800 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் பணியில் ஈட்டுப்பட்டுள்ள நிலையில், தற்போது நியமிக்கப்பட்ட 10,000 ஊழியர்களும் தற்காலிக ஊழியர்கள் என்பது பிளிப்கார்ட் நிறுவன அதிகாரியின் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
800 ஊழியர்கள் பணிநீக்கம்
பிளிப்கார்ட் நிறுவனம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருக்கும் 800 ஊழியர்களை முழுமையாகப் பணிநீக்கம் செய்யும் மிகப்பெரிய நிர்வாகச் சீர்திருத்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இதில் 400 ஊழியர்கள் உடனடியாகவும், மீதமுள்ள 400 ஊழியர்களுக்குச் சில மாதங்கள் கால அவகாசம் அளித்து நிறுவனத்தை விட்டு வெளியேற்ற நிர்வாகம் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
யாருக்கு ஆபத்து...
ஜூலை மாதத்தில் வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் பெரும்பாலானோர் வாடிக்கையாளர் சேவை மற்றும் செயற்பாடுகள் பிரிவுகளில் இருந்தவர்கள்.
தற்போது பிளிப்கார்ட் நிறுவனம், 3,200 ஊழியர்கள் கொண்ட தனது முக்கிய அணியில் (Core Team) கைவைத்துள்ளது.
முக்கிய அணி
தற்போது பிளிப்கார்ட் முக்கிய அணியில் நடுத்தர மற்றும் உயர் ஊழிய குழுவில் இருக்கும் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத்திட்டமிட்டுள்ளது.
இதன் படி வருடத்திற்கு 8-9 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் அளவில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிநீக்கம்
அமேசான் தாக்கத்தின் மூலம் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைச் சந்தித்த பிளிப்கார்ட் நிறுவனத்தில் சாதாரண ஊழியர்கள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இதில் நானும் பாதிக்கப்பட்டேன். என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓ சச்சின் பன்சால் கூறினார்.
8வருடங்கள்
பிளிப்கார்ட் நிறுவனத்தைத் துவங்கிய 8 வருடங்கள் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த சச்சின் பன்சால், வர்த்தக இலக்கை எட்டமுடியாத காரணத்திற்காக முதலீட்டாளர்கள் அவரைச் சீஇஓ பதவியில் இருந்து நிர்வாகத் தலைவர் என்ற பதவிக்குத் தள்ளிவிட்டனர்.
இதனால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனரான பின்னி பன்சால் புதிய சீஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.
சச்சின் பன்சால்
2015ஆம் நிதியாண்டு பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு மிகவும் மோசமாக இருந்த நிலையில் முதலீட்டாளர்களின் வர்த்தக இலக்கை அடைய முடியாமல் அதிகளவிலான நஷ்டத்திற்கு நிறுவனம் தள்ளப்பட்டது.
இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் நெருக்கடியின் காரணமாகச் சீஇஓ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் முக்கிய 200 ஊழியர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் சச்சின் பன்சால் கூறினார்.
அமெரிக்காவில் ஆராய்ச்சி
பிளிப்கார்ட் நிறுவனம் சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியாவில் புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அலுவலகத்தை அமைத்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும் தனது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அலுவலகத்தைப் பெங்களுரில் அமைக்கும் நிலையில் நாங்கள் பெங்களுரூ மற்றும் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் ஈகாமர்ஸ் துறைக்குப் பயன்படும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கும் பணியைச் செய்ய உள்ளது.
உலகத் தரம்
சான் பிரான்சிஸ்கோவின் பே ஏரியா அலுவலகத்தில் வடிவமைக்கப்படும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய மக்கள் உலகம் தரம் வாய்ந்த ஈகாமர்ஸ் தொழில்நுட்பத்தைச் சுவைப்பார்கள் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.